தலைப்புச் செய்திகள்

புதிய செய்தி. * . 2013-2014 ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 15/05/2013 அன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்கள்.* G.O.(Ms) No.173 School Education (C2) Department Dated: 08.11.2011 என்ற அரசாணையில் தமிழ்நாடு குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2011 தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. *2011-2012 ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட இடைநிலைப் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதற்கன அரசாணை தற்போது அரசாணை பதிவிறக்கம் பகுதியில் TNHSPGTA, KARUR என்பதில் உள்ளது .

செய்தி ஓட்டம்

நமது இந்த வலைதளத்தில் புதிய செய்திகள், கருத்துரைகள், தமிழில் ஃபோட்டோஷாப் கற்றுக் கொள்ளுங்கள் போன்ற பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன

WELCOME

தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள்(Unicode fonts for Tamil),Adobe reader மென்பொருள், WinRarமென்பொருள் மற்றும் தமிழில் தட்டச்சு செய்யத் தேவையான NHM Writter மென்பொருள் தற்போது அரசாணை பதிவிறக்கம் பகுதியில் உள்ளது

புதிய இடுகைகள்

News scroll

அரசாணைகள், தேவையான படிவங்கள் ஆகியவற்றை இந்த வலைதளத்தின் “சிலவற்றை இங்கே இருந்தும் பெறலாம்” என்ற பகுதியில் இருந்தும் சுட்டிப் பெறலாம்.


பார்வையாளர்களுக்கான தகவல்

நமது இந்த வலைத்தளம் வெற்றிகரமாக இருபத்திரண்டாவது மாதத்தில் 07/12/2012 வெள்ளிக் கிழமையன்று அடி எடுத்து வைக்கிறது. தகவல்களையும், கருத்துக்களையும் தெரிவிக்க வலைதளத்தின் வலது பக்கமுள்ள “கருத்துரைகள்” என்ற பகுதியிலோ அல்லது வலைதளத்தின் கீழே உள்ள "Guest Book" என்ற பகுதியிலோ தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வலைதளத்தில் வெளியாகும் இடுகைகளை தங்களது மின்னஞ்சலில் பெற வலைதளத்தின் கீழே உள்ள "இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்" என்ற பகுதியில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


புதிய செய்தி

2013 - 2014 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன


வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனத்திற்கு M.Sc., வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணையானது அரசாணை(MS) No 165 பள்ளிக் கல்வி (மேநிக)துறை நாள் 04/07/2012 ல் வெளியிடப்பட்டுள்ளது


2011-2012 ம் 1 முதல் 8 ம் வகுப்பு முடிய கற்பிக்க 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை


G.O.(Ms) No.173 School Education (C2) Department Dated: 08.11.2011 என்ற அரசாணையில் தமிழ்நாடு குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2011 தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


புதியன

?ு?ி??

பள்ளிக் கல்வித் துறையால் 2012 - 2013 ம் கல்வியாண்டு பள்ளி வேலை நாட்கள் சார்பான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பெற இங்கு சுட்டவும்

To download as pdf NEW

2013 -ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

To download as pdf NEW

தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைக்கான அரசாணையினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

To download as pdf NEW

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ 2000/- ஐ ரூ 5000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியாற்றிய தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரூ 500/- ஐ ரூ 2000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத தற்காலிக பணியிடங்கள் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஊதியம் பெறத் தேவையான அரசாணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனம் – M.Sc.,வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணை

To download as pdf NEW

அரசாணை (1டி) எண் 100 பள்ளிக் கல்வி (இ1)த் துறை நாள் 13.03.2009 ல் வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவர்களுக்கு ஜூன் 2012 ல் ஊதியம் பெறுவதற்கான ஆணை.

To download as pdf NEW

டி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை

அரசாணை (1டி) எண் 200 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள் 26/06/2012 ன் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 6239 தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கிய ஆணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை மற்றும் அப்பள்ளிகளின் பட்டியலைப் pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

2012-2013 ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை பெற இங்கு சொடுக்கவும் To download as pdf NEW

2012 - 2013 ம் கல்வியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிர்களுக்கான பதவி உயர்விற்கான திருத்தம் செய்யப்பட்ட கால அட்டவணையினையினை பெற இங்கு சுட்டவும் To download as pdf NEW

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2012 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய ஆணையின் நகல் (4 ஆணைகளை உள்ளடக்கியது)

To download as pdf NEW

+2 க்கு பிறகு என்னனென்ன படிக்கலாம் அறிய இங்கே சுட்டவும் NEW

01/01/2012 அன்றுள்ளபடி மேல்நிலைத் தலைமையாசிரியர்களுக்கு தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டிலை [PANEL] எக்ஸெல் கோப்பாக பெற இங்கே சுட்டவும் NEW

பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு 2012-2013 நகலை பெற இங்கே சுட்டவும் To download as pdf NEW

Revision of scales of pay – Revival and Appointment of Chairman and Members to the Pay Grievance Redressal Cell. CLICK HERE TO GET A COPY To download as pdf NEW

ஜனவரி 2012 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகலை பெற இங்கே சுட்டவும் To download as pdf NEW

2011-2012 ம் கல்வியாண்டில் 710 அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

To download as pdf NEW

தமிழ்நாடு குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2011 (அரசாணை)

To download as pdf NEW

அரசு ஊழியரின் திருமணம் ஆகாத மற்றும் விதவையான பெண் வாரிசுகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என்பதற்கான அரசாணை

To download as pdf NEW

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் விவரப் பட்டியல்

To download as pdf NEW

2012 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் G.O. Ms. No.994, PUBLIC (MISCELLANEOUS) DEPARTMENT Dated 20-10- 2011 To download as pdf NEW

2007-2008, 2008-2009, 2009-2010 ம் கல்வியாண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைக்கான உத்திரவு வழங்கப்பட்டுள்ளது To download as pdf NEW

2006-2007, 2007-2008, 2008-2009, 2010-2011 ம் கல்வியாண்டுகளில் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதற்கான ஆணை To download as pdf NEW

2011-2012 கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை மற்றும் பள்ளிகளின் பட்டியல் NEW

Right of Children to Free and Compulsory Education Act, 2009 ( Central Act 35 of 2009)அறிய NEW

Showing posts with label JAC NEWS. Show all posts
Showing posts with label JAC NEWS. Show all posts

Thursday, 3 March 2011

KARUR & NAMAKKAL DISTRICT TNHSPGTA MEETING

Our Association meeting for Karur and Namakkal Districts will be held on 06-02-2011 Sunday 10.00 am at GHSS, Namakkal South. Our State president Mr V.Manivasagan will deliver his speech. So all the members are invite to attend the meeting.

M.Devaraju, Dt. President.

Sunday, 27 February 2011

27/02/2011 அன்று JAC சார்பில் நடைபெற்ற மறியலில் சில காட்சிகள்

27/02/2011 அன்றைய  மறியலின் துவக்கம்


                                                            சாலை மறியல் துவங்குகிறது

  கைது நடைபெறுகிறது

கரூர் நாரத கான சபாவினுள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மறிலுக்குத் தலைமை வகித்த தலைமையாசிரியர் திரு சு.வெங்கடாசலம் அவர்களின் உரை


                                    தலைமையாசிரியர் திரு இராமலிங்கம் அவர்கள் உரையாற்றுகிறார்
          TNHSPGTA வின் மாநிலத் துணைத் தலைவர் திரு ஆறுமுகம் அவர்கள் உரையாற்றுகிறார்
               முதுநிலைப் பட்டதாரி ஆசிரியை திருமதி விஜயலட்சுமி அவர்கள் உரையாற்றுகிறார்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திரு நாராயணன் அவர்கள் உரையாற்றுகிறார்
                  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்திரு ஜான் அவர்கள் உரையாற்றுகிறார்
TNHSPGTA வின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு கே.கனகராசு அவர்கள் உரையாற்றுகிறார்

ஏன் இந்தப் போராட்டம்?

ஏன் இந்தப் போராட்டம்?
அறிவுசால் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களே!,
ஆற்றல்சார் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியப் பெருமக்களே!
நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
10/11/2010 ல் மாநிலம் முழுவதும் சிறுவிடுப்பு போராட்டம் நடத்தினோம்.
11/12/2010 மண்டல அளவில் பட்டினிப் போராட்டம் நடத்தினோம்.
25/01/2011 ல் நமது கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயர்மட்டக் குழு மற்றும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஒரு மாதம் முன்பே அறிவிப்பினை அரசுக்கு கொடுத்தோம். ஆனால் பலனில்லை.
நமது கோரிக்கைகளின் நியாயங்களைப் புரியாதவர்களுக்கும், நமது வேதனைகளை அறியாதவர்களுக்கும் இதனை நகல் எடுத்துக் கொடுங்கள். நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை பொறுத்துக் கொண்டு எப்படி? நாம் நமது பணியினை ஆற்ற முடியும் என்பதை அவர்கள் அறியட்டும்.
     1.   1996 ல் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிக்கு வந்தவர்கள் 15 ஆண்டுகளாக அதே பணியில் பதவி உயர்வு ஏதுமின்றி விரக்தியுடன் உள்ளனர்.
         மேற்காண் தலைமையாசிரியரிகளிடம் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்கள் 2004-2005 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவியுயர்வு பெற்று பிறகு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று, தான் பணியாற்றி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கே உயர் அதிகாரிகளாக வரும் அவல நிலை.
     2.   அவர்கள் பதவி உயர்வு பெறுவதை நாம் குறை கூறவில்லை. நமக்கு நெடுங்காலமாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பதையும், இயற்கைக்கு முரணாக கீழ்நிலைப் பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய பணிக்கு மேலே உள்ளவர்களுக்கு அதிகாரிகளாக வருகின்ற அபத்தத்தால் நமக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலும், மனச்சோர்வும் நம்மை இத்தகைய போரட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
     3.   1988 ல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்ற பலரும் 22 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பதவி உயர்வும் இல்லாமல் உள்ளனர். இதுபோன்ற கொடுமைகள் வேறு எந்தத் துறையிலும் இல்லை.
     4.   மேற்காண் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிறகு பணிநியமனம் பெற்ற வேறு வகை ஆசிரியர்கள் பலவேறு பதவி உயர்வுகளை பெற்றுள்ளனர். இவையெல்லாம் தமிழக அரசின் வேறு வேறு அரசுத் துறைகளில் நடக்கின்ற குளறுபடிகள் அல்ல. அறிவுபுகட்டுகின்ற தமிழக அரசு கல்வித் துறையில் மட்டும்தான் நடைபெறுகிறது.
     5.   முந்தைய ஊதியக் குழு வரை நமக்கான ஊதியத்திற்கு சமமாக மற்றும் நமது ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் பெற்று வந்தவர்களுக்கு தற்போதை ஊதியக் குழுவில் நம்மைவிட அதிகமான ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசில் மனித வள மேம்பாட்டில் பல அளப்பறிய பணியினை செய்து வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை குறைத்து மதிப்பிட்டு செயல்படுவது எவ்வகையில் நியாயம்?
     6.   நாம் சம்பள உயர்வு கோரவில்லை, சம்பள நிர்ணயத்தில் சமநிலைதானே கேட்கிறோம்.
ஆகவே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியகளே, மேல்நிலைப் பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களே நாம் மேற்கொண்டிருப்பது போரரட்டமல்ல, தர்மயுத்தம் என்பதை மறவாதீர். அனைவரும் ஒன்றாய் கூடி நமது வேதனைகளை அரசுக்குத் தெரிவிப்போம் வாரீர்.

Thursday, 10 February 2011

வேலை நிறுத்தத்திற்கு விருப்பக் கடிதம் பெற்றது

JAC செய்தி.

கீழ்காணும் குழுவினர் 11/02/2011 மற்றும் 14/02/2011 அன்று சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான கடிதங்களை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து பெற்று வந்தனர்.

1.திரு ந.கருணாகரன், தலைவர், T.N.H.S.S.H.M.A., கரூர் அவர்கள் மற்றும் திரு செ.தீனதயாளன், மாவட்டச் செயலாளர், T.N.H.S.P.G.T.A., கரூர் அவர்கள் தலைமையிலான குழு தாந்தோணிமலை துவங்கி கரூர் நகரப் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.


2.திரு க.கனகராசு, மாநிலச் செயலாளர், T.N.H.S.P.G.T.A., அவர்கள், திரு மா.ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவர், T.N.H.S.P.G.T.A., அவர்கள் மற்றும் திரு சி.கருப்புசாமி, தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, அரவக்குறிச்சி ஆகியோர் தலைமையிலான குழு பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.

3. திரு இராஜேந்திரன் அவர்கள் தலைமையிலான குழு புன்னம்,நொய்யல்,புகழூர்,வாங்கல்,நெரூர்,அரங்கநாதன்பேட்டை ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.

4.திரு பெ.பெரியசாமி அவர்கள் தலைமையிலான குழு குளித்தலை வட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.

5.திரு ஆறுமுகம் அவர்கள் தலைமையிலான குழு கிருட்டிணராயபுரம் வட்டத்திலுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வந்தனர். 

Wednesday, 9 February 2011

JAC NEWS

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு.

அன்புடையீர் வணக்கம்,

நமது கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் 25/01/2011 அன்று சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்:-

1. 26/02/2011 சனிக் கிழமை மற்றும் 27/02/2011 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.

2. 28/02/2011 திங்கட் கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தம்.

3. 13/02/2011 ஞாயிற்றுக் கிழமையன்று அனைத்து மாவட்டங்களிலும் மறியல் ஆயத்தக் கூட்டங்களை நடத்துதல்.

4. 13/02/2011 அன்று கரூரில் நடைபெறவுள்ள மறியலில் மாநில கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்ள உள்ளவர் திரு எம்.மாசானம், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சோழவந்தான், மதுரை மாவட்டம்.

5. மறியல் தொடர்பான சில முக்கியக் குறிப்புகள்

அ. 26/02/2011 சனிக்கிழமை மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொள்ளும் மாவட்டங்களில் மூன்று சங்க அமைப்பாளர்கள் பங்கேற்று சிறை செல்லுதல்.

ஆ. 27/02/2011 ஞாயிற்றுக் கிழமை 3 அமைப்புகளின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் தவிர பொருளாளர் அல்லது அமைப்புச் செயலாளர் தலைமையில் சிறை செல்லுதல்.

இ. 28/02/2011 அன்று 3 அமைப்புகளில் 27/02/2011 அன்று கலந்து கொள்ளாத பிற மாவட்ட நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் அல்லது அமைப்புச் செயலாளர் தலைமையில் சிறை செல்லுதல்.

ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்.

இப்படிக்கு,
ஆ.சின்னதுரை,
மாநில செய்தி தொடர்பாளர்,